க.எண்: 202007193
நாள்: 29.07.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 31-07-2020 வெள்ளிக்கிழமையன்று நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
31-07-2020 வெள்ளி |
காலை 10:30 மணியளவில் |
நாமக்கல் மேற்கு மாவட்டம் (திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) | இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12 மணியளவில் |
நாமக்கல் கிழக்கு மாவட்டம் (இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
||
மாலை 4:30 மணியளவில் |
நாமக்கல் தெற்கு மாவட்டம் (நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்