சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

141

க.எண்: 202007193
நாள்: 29.07.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 31-07-2020 வெள்ளிக்கிழமையன்று நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
31-07-2020
வெள்ளி
காலை 10:30
மணியளவில்
நாமக்கல் மேற்கு மாவட்டம் (திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12
மணியளவில்
நாமக்கல் கிழக்கு மாவட்டம்
(இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு)
மாலை 4:30
மணியளவில்
நாமக்கல் தெற்கு மாவட்டம்
(நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

முந்தைய செய்திபற்றாக்குறையாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வில் தேர்வானவர்களை உடனடியாக பணியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகொரோனா தடுப்பு கபசுரக்குடிநீர் வழங்குதல் – புல்லங்குடி, திருவாடனை தொகுதி