செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களையும் நிர்வகிக்க புதிய ஒன்றிய தலைமை அலுவலகம் (13/12/2020) திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள், குறிப்பாக மேல்மலையனூர் வட்டத்திலுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மேல்மலையனூர் வட்டத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவும் அதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி அணுகுவது என்பதை பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.