விருகம்பாக்கம் தொகுதி சார்பில் எழுத்தறிவித்த இறைவன் ஐயா காமராசரின் நினைவைப் போற்றுகிற விதமாக சாலிக்கிராமம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்யப்பட்டது.தொகுதிச்செயலாளர் மணிகண்டன் தவைமையில், நிகழ்ந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் ஐயாவுக்கு மாலை அணிவித்து சிறப்புச் சேர்த்தார்கள்.. நிகழ்வில் மாவட்டம், தொகுதி, பகுதிகள், வட்டங்களின் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு புகழ்வணக்கம் செய்தார்கள்.