கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

462

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி “கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்” முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணி அளவில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வளக்கொள்ளைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

முந்தைய செய்திமக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த…
அடுத்த செய்திசிங்களப் பேரினவாத அரசின் கோர இன அழிப்புக்கு ஆளாகி, நிர்கதியற்ற…