மூத்த திரைக்கலைஞர்
திரையுலகின் மார்க்கண்டேயன்
நடிப்பாற்றலாலும், குணநலனாலும் மக்கள் மனங்கவர்ந்த ஆளுமை,
தமிழ் மீது அளப்பெரும் பற்றும், புலமையும் கொண்ட பெருந்தமிழர் ஐயா சிவகுமார் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!

'பசும்பொன்' திரைப்படத்தில் அவரோடு பணியாற்றியபோது என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு என்னை அரவணைத்ததை இத்தருணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். அந்த உறவின் மகிழ்ச்சியில், அன்பின் நெகிழ்ச்சியில் ஐயா சிவகுமார் அவர்கள் நீடூழி வாழ உள்ளன்போடு வாழ்த்துகிறேன்!


