நாம் தமிழர் கட்சி – திருப்பூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பிரேம் அவர்களின் தந்தையும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை அபிநயா அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா நா.குருசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும்,தங்கைக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நா.குருசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



