நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கம்பர் நத்தம், கீழத்தோப்புப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இரா.துளசிராஜன் அவர்களின் பாட்டி க.வடுவம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் பாட்டியை இழந்து வாடும் தம்பி இரா.துளசிராஜன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா க.வடுவம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



