அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி! – சீமான் பெருமிதம்

250

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபிய நாட்டின் மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகள் இனி நமது தாய்மொழியான தமிழிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு நேரலையாக ஒளிப்பரப்பப்படும் என்ற அந்நாட்டு அரசின் அறிவிப்பு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

பலகோடி தமிழர்கள் வாழும் இந்திய நாட்டின் பாராளுமன்ற அவைகளிலும், நீதிமன்றங்களிலும் தாய்த்தமிழில் வாதிடும் உரிமைக்காக இன்றுவரை தமிழர்கள் இடைவிடாது போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இஸ்லாத்தை ஏற்ற தமிழர்கள் இறை வழிபாட்டினை தங்கள் தாய்மொழியிலேயே கேட்டு வழிபட உதவிடும் வகையில் தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்திருக்கும் சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
அடுத்த செய்திகீழ்பவானி கான்கிரீட் வாய்க்கால் திட்டத்தை எதிர்த்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – காங்கேயம்