கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 06-07-2022 காலை 10 மணியளவில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன முழக்கம்
செய்தியாளர் சந்திப்பு
கண்டன உரை
முன்னதாக, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.