பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

35

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் சூரக்குப்பம் கிளை சார்பில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு சூரக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஐயா காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தி அங்கு பயிலும் 190 மாணவ – மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல் (பேனா) , அளப்பான் (ஸ்கேல்), அழிப்பான் (ரப்பர்), கூர்தீட்டி (ஷார்ப்னர்), வாய்ப்பாடு ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்வில் பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வெற்றிவேலன், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குட்டி (எ) புருசோத், தொகுதி துணை தலைவர் மணிவண்ணன், தொகுதி இளைஞர் பாசறை துணை செயலாளர் வசந்த புருசோத்தமன், பண்ருட்டி நகர செயலாளர் (கிழக்கு) வேல்முருகன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சிவசந்திரன், பண்ருட்டி நகர 3வது வார்டு செயலாளர் ரியாஸ் அகமது, சூரக்குப்பம் கிளை செயலாளர் சந்தோஷ், இணை செயலாளர் கஜேந்திரன், மகளிர் பாசறை காயத்ரி, செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன், துணை செயலாளர் சிவகுமார், திருமலைவாசன், மருதுபாண்டி, சூர்யா, மாணவர் பாசறை அஜித்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்வு நிறைவில் மாணவருக்கு இனிப்பு வழங்ப்பட்டது.

 

முந்தைய செய்திபோடி சட்டமன்ற தொகுதி காமராசர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை