தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருமகனார் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பாஜகவினர் கைது செய்யாத இந்திய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

56

நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்ப பாசறை,
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678

பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை அவதூறாக பேசி மத நல்லிணக்கத்தை சிதைத்த பாஜக நிர்வாகிகளை கண்டிக்காத & கைது செய்யாத இந்திய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது தென்காசி கொடி மரத்தில் 11/06/22
சனிக்கிழமை
மாலை 5 மணியளவில் தொடங்கியது.

அனிஸ் பாத்திமா
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
எழுச்சியுரை ஆற்றினார்

பசும்பொன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கண்டனவுரை ஆற்றினார்.

மேலும் தென்காசி தொகுதி தலைவர் அழகு பாண்டியன், தென்காசி தொகுதி பொருளாளர் பாலா, வீரத்தமிழர் முன்னணி தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் ரபிக், ஆகியோர் தங்களது எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்
தொகுதி, ஒன்றிய, நகர, கிளை மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திதிருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி தமிழர் பாரம்பரிய கலை உலக சாதனை பயிற்சி வகுப்பு