தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
காணொளி: