நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து நான்காவது நாளாக 04-04-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணியளவில், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 47வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகளை கொடுத்து, செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
உடன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் வீதி வீதியாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி