நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை துப்புரவு செய்யும் பணி 18-12-15 அன்று தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் இரண்டு நாட்கள் இராயபுரம் காசிமேட்டிலும், மூன்றாவது நாள் தாம்பரம் பீர்க்கங்கரணையிலும் நடைபெற்றது.
நான்காவது நாளான இன்று (22-12-15) துப்புரவுப் பணி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தேனாம்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் தேனாம்பேட்டை குடியிருப்புப் பகுதியில் மழைவெள்ளத்தால் தேங்கியிருந்த சாக்கடைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தினர்.
![IMG_6444](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2015/12/IMG_6444-300x200.jpg?resize=300%2C200)
![IMG_6474](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2015/12/IMG_6474-300x200.jpg?resize=300%2C200)
![IMG_6484](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2015/12/IMG_6484-300x200.jpg?resize=300%2C200)
![IMG_6494](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2015/12/IMG_6494-300x200.jpg?resize=300%2C200)
![IMG_6433](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2015/12/IMG_6433-300x200.jpg?resize=300%2C200)