ஈரோடை வடக்கு மண்டலம் ச.கணபதிபாளையம் கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம்

41

ஈரோடை வடக்கு மண்டலம் அந்தியூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ச.கணபதிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? கொள்கை விளக்கத் தெருமுனை கூட்டம் நடை பெற்றது.

அந்தியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி கி.மணிமேகலை கொடி ஏற்றி வைத்தார்.நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏன்? விளக்கவுரை மா.கி.சீதாலட்சுமி அவர்கள். ஈரோடை வடக்கு மண்டலச் செயலாளர் இரா.செழியன் தலைமை தாங்கினார். நிகழ்வில் கவுந்தப்பாடி பேரறிவாளன் வடக்குமண்டலச் செயலாளர், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஒட்டக்கூத்தன், ஈரோடை பிரகாசு, சத்தியமங்கலம் சாக்ரடீசு, கார்த்தி, சகுந்தலா, கோபிசெட்டிபாளையம் வைரவேல், சாமிதுரை,பிரதீப்குமார்,செந்தில்குமார்,முருகேசு,சுரேந்திரன் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தியார் தெய்வம்? செந்தமிழன் சீமான் விளக்கம்
அடுத்த செய்திமாயோன் பெருவிழா பொதுக்கூட்டம் செஞ்சி – சீமான் எழுச்சியுரை