முகப்பு புலம்பெயர் தேசங்கள்

இலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை.

42

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக இலங்கைக்கு ரஷ்யாவும் சீனாவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில், பான் கீ மூனுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தால், அதிபர் ராஜபட்ச அரசுக்கு சர்வதேச அரங்கில் வழங்கி வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று இருநாடுகளும் எச்சரித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கும் ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்திஇலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை! ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது.
அடுத்த செய்திதமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம்.