விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் 14-3-2011 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இரா.க.சீனிவாசன், ரஞ்சித், ஆனந்தகுமார், நேசத்தமிழன் உட்பட நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிடும் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்களை களமாடி தோல்வியடைய செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.