க.எண்: 2023100451
நாள்: 07.10.2023
சுற்றறிக்கை:
காவிரி நதிநீர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டப விவரம்
காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 08-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் திடல் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மாநிலம் தழுவிய அளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து முன்கூட்டியே வருகைதரும் உறவுகள் ஓய்வெடுத்து, தயாராவதற்கு ஏற்ப சென்னை, சேத்துபட்டு, எம்.எஸ்.நகர், சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள சமூக நல கூடத்தில் ஆடவர், மகளிர், குழந்தைகள் அனைவருக்கும் தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே, ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் இவ்வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு: பாலாஜி 9003038680 / லோகேஷ் 9600124182
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
தங்கும் மண்டபத்தின் அமைவிட தடங்காட்டி
https://maps.app.goo.gl/85SmWbRjdP7AvLPE8