எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் கீழ வீதியில் உள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் உழவர் சந்தை அருகே உள்ள புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பெரியகுமட்டி கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சிதம்பரம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பு.ஆதிவராகநல்லூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023030092 நாள்: 10.03.2023   அறிவிப்பு கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த சு.நெப்போலியன் (03465009769) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

சிதம்பரம் தொகுதி மொழிப்போர் ஈகி ஐயா ராசேந்திரன் நினைவேந்தல்

சிதம்பரம் தொகுதி பரங்கிப்பேட்டையில் உள்ள மொழிப்போர் ஈகி *ஐயா இராசேந்திரன்* அவர்கள் விதைக்கப்பட்ட நினைவிடத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி அவர்கள் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.