அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவைதான் எனக் கற்பித்த பேராசான்!
தனக்குக் கிடைக்காத கல்வி, தன் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டுமென்று பல ஆயிரம் பள்ளிக்கூடங்களைத் திறந்து நம்மையெல்லாம் படிக்க வைத்த பெருந்தகை!
(1/3)

பட்டினிக் கிடந்தால் பிள்ளைகளின் மனதில் எதுவும் பதியாது என்பதை உணர்ந்து மதிய உணவிட்ட மாமனிதர்!
பிஞ்சு மனதுக்குள் சாதி, மத நஞ்சு படிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரே உடையாகச் சீருடை தந்த செம்மல்!
(2/3)
எளிமை, தூய்மை, உண்மை, நேர்மை என வாழ்ந்துகாட்டிய பெருந்தலைவர்!
நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று (02-10-2022)
அந்த மகத்தான பெருந்தலைவருக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
(3/3)


