முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மிருகங்களை அப்பாவியாக மனிதன் எண்ணுகிறான். தன் பிறவியை மேம்பாடாக நினைக்கிறான்….

1

மிருகங்களை அப்பாவியாக மனிதன் எண்ணுகிறான்.

தன் பிறவியை மேம்பாடாக நினைக்கிறான்.

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா?

விலங்குகளும், பறவைகளும் வஞ்சனையற்றவை.

காலக் கணக்குப்படி சொர்க்க – போகமாய் வாழ்பவை! https://x.com/SeemanOfficial/status/1583979014535929858/video/1

▶ Play Video on X ↗

நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை.

உலகம் தோன்றிய நாள் முதலாய், உலகமெங்கிலும் இயற்கையின் நீதி ஒன்றே!

அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது. https://x.com/SeemanOfficial/status/1584341401977905152/video/1

▶ Play Video on X ↗

சிங்கமோ, சிறு நரியோ மிருகங்களுக்குள் ஏதாவது தனக்குள் எஜமானன் என்று மற்ற மிருகத்தை அண்டி உயிர் வாழ்கிறதா?

மனிதக் குலத்தில்தான் இந்த எஜமானன் – வேலையாள், சாதகம் – பாதகம் எல்லாம் நடைபெறுகிறது. https://x.com/SeemanOfficial/status/1584703789784653825/video/1

▶ Play Video on X ↗

தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே தவிர, பிறப்பும் இறப்பும் என்ற கணக்குப்படி மனிதர்களும், உலகத்தில் பிறந்த மற்ற உயிரினங்களும் உயிர்ப்பொருளே!

அழிந்தும், பிறந்தும் அலைமோதும் துரும்புதான் மனிதப்பிறவி!

– சிந்தனையாளர் மான்டேயி! https://x.com/SeemanOfficial/status/1585066176832425985/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு…