தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றிய மனிதநேய மருத்துவர் ஐயா இரத்தினம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
மருத்துவம் என்பது மகத்தான சேவை; அது எம்மக்களுக்குத் தேவை எனும் உயர்ந்த நோக்கோடு, மக்கள் சேவையாற்றி, 'பத்து ரூபாய் டாக்டர்' என அன்பொழுக மக்களால் அழைக்கப்பட்ட ஐயா இரத்தினம் அவர்கள் மறைந்தாலும், மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
ஐயா இரத்தினம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



