தலைமை அறிவிப்பு – சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு நிறைவுறாத சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்

59

க.எண்: 2025060573

நாள்: 07.06.2025

அறிவிப்பு:

சேலம் மாவட்டத்தில்
புதிய கட்டமைப்பு நிறைவுறாத
சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
11-06-2025 மாலை 04 மணி முதல்இடம்:
அமுத விலாஸ்
(மூன்று சாலை)
சேலம்

சேலம் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் பொறுப்பாளர் நியமனம் நிறைவுறாத கெங்கவல்லி, ஓமலூர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த
கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 11-06-2025 அன்று
மாலை 04 மணி முதல் சேலம் மூன்றுசாலையில் அமைந்துள்ள அமுத விலாஸ் அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார். தொடர்ந்து, கட்சி பொறுப்புகள் நியமிக்கப்பட்ட மற்ற மண்டலங்களுக்கான பாசறைப் பொறுப்பாளர்கள் பட்டியலை இறுதிசெய்யவிருக்கிறார்.

எனவே இந்நிகழ்வில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நினைவைப் போற்றும் நூற்றாண்டுப் பெருவிழா
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை