தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதிக்காகவும்,
தமிழ்ப்பேரினத்தின் நல்வாழ்வுக்காகவும், தமிழின உரிமைப் பாதுகாப்புக்காகவுமான
தங்களது பெரும்பணிகள் என்றென்றும் தமிழ் மக்களால் போற்றப்படும்!
ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமுடனும் மனமகிழ்வுடனும் வாழ்ந்து, இனிவரும் தலைமுறை பிள்ளைகளுக்கும் வழிகாட்டவும், தொடர்ந்து அரசியல் தெளிவூட்டவும் வேண்டுமென அன்புடன் கோருகிறேன்.
அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட, சமூகநீதி போராட்டக் களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா இராமதாசு அவர்களுக்கு என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



