ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi



