நாம் தமிழர் கட்சி – துறையூர் சட்டமன்றத்
தொகுதியின் மேற்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவி தங்கை சாந்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
வாழ்க்கைத்துணையை இழந்து வாடும் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
தங்கை சாந்தி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



