க.எண்: 2025100913
நாள்: 09.10.2025
அறிவிப்பு:
மாவீரர் நாள் 2025 ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நினைவேந்தல் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: கார்த்திகை 11 | 27-11-2025 மாலை 04 மணியளவில் இடம்:
|
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 அன்று மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி