நாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி விக்னேசு அவர்களின் தந்தை ஐயா சின்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி விக்னேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சின்னுசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



