கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத் செந்தமிழர் பாசறையின் தெற்கு மண்டலத் தலைவர் அன்பு சகோதரர் ச.யாதவராஜ் அவர்களின் தாயார் அம்மா சந்திரா சக்கரபாணி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தாயை இழந்து வாடும் சகோதரருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சந்திரா சக்கரபாணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.



