புரிந்து கொள்ளுங்கள்..!
நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது.
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது.
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது.
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது.
பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும்.
புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும்.
செயல்கள் சிறந்தால் சாதனை பிறக்கும்.
சாதனை பிறந்தால் வாழ்க்கை இனிக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்.!
உள்ளம் விரிந்தால் உறவுகள் விரியும்.
உறவுகள் விரிந்தால் உதவிகள் பெருகும்.
உதவிகள் பெருகினால் ஊக்கம் வளரும்.
ஊக்கம் வளர்ந்தால் ஆக்கம் திகழும்.
புரிந்து கொள்ளுங்கள்..!


