கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிநாதபுரம் ஊரைச் சார்ந்த அமீரக செந்தமிழர் பாசறை ஆன்றோர் அவையத் துணைத் தலைவர் அன்புத் தம்பி தீபக் சாலமன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா செல்லத்துரை அவர்கள் மறைவெய்திய துயரச் செய்திகேட்டு தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அப்பா அவர்களை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் முழுமையாக பங்கெடுக்கிறேன்.
ஐயா செல்லத்துரை அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.



