அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அன்புமகள் அருளரசியின் சிகிச்சைக்கு உதவுவோம்! – தாய்த்தமிழ் உறவுகளிடத்தில் சீமான் வேண்டுகோள்

224

நாம் தமிழர் கட்சியில் கடந்த 2011 ஆண்டு முதல் பயணித்து, பத்தாண்டிற்கும் மேலாக மண்ணிற்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் தீவிர களப்பணியாற்றி வந்த மாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர், அன்புத்தம்பி சு.மாதவன் அவர்கள் கடந்த 26-09-2022 அன்று பணியிடத்தில் ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

தம்பி மாதவனின் எதிர்பாராத மறைவினால் குடும்பம் வறுமையுற்று வாழ்வதற்கே மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில், அவருடைய அன்பு மகள் அருளரசி அவர்களுக்கு முகச்சிதைவு அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏறத்தாழ 6 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்ற நிதி உதவியினை அளித்து உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நிதியுதவி வழங்க வேண்டிய வங்கி கணக்கு விவரம் :-

இரா.ஏழுமலை (திருவள்ளூர் மண்டலச் செயலாளர்)
இரா. ஏழுமலை (ELUMALAI R)
SBI AC. No: 34529589774
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
மாதவரம் கிளை, சென்னை – 60
IFSC: SBIN0015491
Google pay number: 9282102289

தொடர்புக்கு: 9282102289

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – சேலம்
அடுத்த செய்திசுற்றறிக்கை: ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் 2023ஆம் ஆண்டிற்கான ஆண்டுக்கட்டணம் செலுத்துதல் தொடர்பாக