க.எண்: 2022080356
நாள்: 18.08.2022
அறிவிப்பு:
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் கன்னியாகுமரி மாவட்ட நிகழ்வுகள்
நிகழ்வு 01 | நாள்: 20-08-2022 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் |
தேங்காப்பட்டணம் துறைமுகம் பார்வையிடல்
முறையாகத் திட்டமிட்டுக் கட்டப்படாத தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரங்களில் எழும்பும் கோர அலைகளில் படகுகள் சிக்குண்டு விபத்துக்குள்ளாவதில் தொடர்ச்சியாக மீனவச் சொந்தங்கள் உயிர்பலியாகும் பகுதிகளை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பார்வையிட்டு மீனவ மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிகிறார். |
|
நிகழ்வு 02 | நாள்: 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை, மாலை 04 மணியளவில்
இடம்: திங்கள் சந்தை பேருந்து நிலையம் அருகில், கனிமவளக் கொள்ளையைக் கண்டித்து, |
இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி