ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள்! – சீமான் சீற்றம்

110

நீங்கள் இடித்தது வீடுகளை மட்டுமல்ல; சனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமென நம்பிக்கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை! இந்நாட்டின் இறையாண்மையை! பன்முகத்தன்மையை! மக்களின் ஒருமைப்பாட்டை! தகர்த்தது வீட்டின் செங்கற்களை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச்சாசனத்தையும்தான்!

நேற்றைக்கு மசூதியை இடித்தீர்கள்! இன்றைக்கு வீடுகளை இடிக்கிறீர்கள்! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும் இன்றைக்குப் பேயாட்டமிடலாம்; வீடுகளை இடிக்கலாம்; வழக்குகளைத் தொடுக்கலாம்; மக்களை ஒடுக்கலாம்.

ஹிட்லருக்கும், முசோலினிக்கும் வரலாறு எழுதிய முடிவுரைகளை ஒரு முறை நீங்களும் நினைவில் கொள்ளுங்கள் ஆட்சியாளர் பெருமக்களே!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுருதிக்கொடை அளித்து, மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்க உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்! – சீமான் பேரழைப்பு