விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

127
விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த குடிநீரை குடித்து மனித உயிர் மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்ற வாயில்லா ஜீவராசிகளும் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த பேராபத்தை கண்டித்தும் தொழிற்சாலையை மூடகோரியும் விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ITC தொழிற்சாலை எதிரில்,

செவ்வாய்கிழமை 12/04/22, மாலை 3மணி அளவில் நடைபெற்றது.

நாம்தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை, கிராம பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்தனர்.
முந்தைய செய்திஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்