*2022 நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு*
கவுண்டம்பாளையம் தொகுதி தொகுதி சார்பாக 30.01.2022 மதியம் 2 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ளும் விதமாக வேட்புமனுக்களுக்கு தேவையான ஆவணங்கள், வேட்பாளர்கள் தெரிந்த கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள், பரப்புரை திட்டமிடல் என பல்வேறு விடயங்களுக்காக இந்த கலந்தாய்வு நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணி குழுவினரால் ஆலோசனைகள் மற்றும் வழிநடத்துதல் குறித்தான கருத்துக்கள் வழங்கப்பட்டது.