குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

50

தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக இன்று (06.12.2021)காலை 9 மணியளவில் புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளையொட்டி வடலூர் பேருந்துநிலையம் பண்ருட்டி சாலையில் அமைந்துள்ள அண்ணல்அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலைஅணித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வானது அண்ணல்அம்பேத்கர்,தமிழ்தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழ்முழக்கமிட்டு, தாயகவிடுதலைப்
போரில் உயிர்துறந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ,
இனவிடுதலைஉறுதிமொழிஎடுத்து முடிவுபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண்ஒன்றிய செயலாளர் ராஜன்,நடுவண்ஒன்றியதலைவர்சுரேஷ்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர் நகரத்துணைத்தலைவர் அருள்சின்னப்பராஜ்,வடலூர் பொறுப்பாளர் சிலம்பரசன்,வடலூர் சேவியர்,ராகுல்ராஜ்,தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நரேஷ், அருளானந்தம் ஆகியோர்நிகழ்வில் பங்கேற்றனர்.நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்குப் புரட்சிகர
வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றி

இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.

 

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி கிளைக் கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி தமிழ் தேசிய தலைவர் வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா