நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல் போடப்பட்டுள்ளனவா, சாலைப் பணிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா, சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் ஏன் தரமற்றதாக உள்ளது என இலஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்தி, அனைத்து சாலைகளையும் உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி, குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெல்வின் ஜோ அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்கப்பட்டது.