புதுக்கோட்டை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

23

ஜூலை 03 சனிக்கிழமை அன்று நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வாகன எரிபொருள் விலையைக் கண்டித்தும் மற்றும் மதுபானக் கடைகளை மூடக் கோரியும். புதுக்கோட்டை தலமை மருத்துவ மனை மீண்டும் அதே இடத்தில் இயங்கக் கோரியும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் பாசன குளங்களில் கலப்பதை தடுத்திடக் கோரியும், *இந்திய ஒன்றிய அரசு* மற்றும் *தமிழ்நாடு அரசைக்* கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து தொகுதி, நகர,ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளும் கலந்து கொண்டனர்.

கண்டன பேருரை: ஹிமாயுன் கபீர் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள்

நாள் : 03: 07: 2021

கிழமை : சனிக்கிழமை

நேரம் : மாலை : 4 மணிக்கு

இடம் : அண்ணா சிலை அருகில்

இவண்

நாம் தமிழர் கட்சி
புதுக்கோட்டை மாவட்டம்

செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்

 

முந்தைய செய்திவாசுதேவநல்லூர்  தொகுதி கடல்தீபன் இரங்கல் நிகழ்வு
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு