சோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா

21

15.08.2021 அன்று சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி ஒன்றிய மகளிர் பாசறை சார்பாக மாணவச் செல்வங்களின் அறிவுத்திறன் மேம்பட ஓவியம்,திருக்குறள்,கட்டுரைப் போட்டிகள் நிகழ்த்தி அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் திருமதி .நாகலட்சுமி
திருமதி. ரமீசா ஆகியோர் மாணவ செல்வங்களுக்கான போட்டிகளிலும் நடத்தி,பரிசுகளையும் வழங்கினர்.
இவ்விழாவில் சோழவந்தான் தொகுதியின் இணைத்தலைவர் அ.முத்து,வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் பரமேசுவரன்,வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராசமகேந்திரன், சோழவந்தான் நகர செயலாளர் சங்கர் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி பதிவிடுபவர்:
இரா.கோபி
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்,
சோழவந்தான் தொகுதி
9600303022

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு