கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக இன்று (18.05.2021) மாலை 5 மணியளவில் இணையவழியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் இன எழுச்சிக் கூட்டம் நடைபெற்றது.இதில் தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், தமிழ்தேசிய பெருநெருப்பான நமது அண்ணன் சீமான் அவர்களை தமிழினத்திற்கு தந்த அவரின் தந்தை செந்தமிழன் அவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும்,முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் எழுச்சியுரை ஆற்றினார்.
இதில் கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்வு முடிக்கப்பட்டது.
8148809334
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி,
நாம் தமிழர் கட்சி.