மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள சிவகிரி பேரூராட்சியில் 03/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர் திரு.லோகுபிரகாசு அவர்களுடன் தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய பரப்புரையின் போது சிவகிரி மற்றும் பழமங்கலம் பகுதிகளை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்கள் நமது கட்சியில் புதிதாக இணைந்தனர்.