கபசுரக் குடிநீர் வழங்குதல்- மரக்கன்றுகள் நடும் விழா- ஓசூர் தொகுதி

44

15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி –  வீரத்தமிழர் முன்னணி சார்பாக, 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ஓசூர் சட்டமன்றத்தொகுதி யின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, ஓசூர் நல்லூர் ஒன்றியத்தின் விஷ்ணு ஆனந்தம் கேலக்சி குடியிருப்பில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்களைக் கொண்டு, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாட்டுமரங்கள் நடப்பட்டன. 

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர்
அடுத்த செய்திஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்