கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் புதுச்சேரியில், (25.06.2020) அன்று காலை கருப்புக்குடை ஏந்தி கண்டன முழக்கப் போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.