அறிவிப்பு: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி

158

09-05-2017 கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – கூடலூர் (கம்பம்) | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி

மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி கண்ணகியின் பெரும்புகழைப் போற்றும் விதமாகவும், ‘பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!’ என்ற தத்துவ முழக்கத்திற்கேற்பவும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுக்கும் “கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம்” இன்று 09-05-2017 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் கூடலூர் (கம்பம்) பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் இறைநெறி இமையவன் அவர்களும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் பெருவிழாப் பேருரையாற்றுகின்றனர்.

வீரத்தமிழர் முன்னணி : 97885 04955 / 87784 15822


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044-4380 4084

முந்தைய செய்திநீட் தேர்வு மற்றும் அரசு மருத்துவர்களின் மேற்படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு தனிச்சட்டங்கள் இயற்றவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழர் முன்னணி