சீமான் வீடு வீடாக நடந்து சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு – 39வது வட்டம்

68

நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து 2வது நாளாக இன்று 02-04-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவில், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 39 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டறிக்கைகளை கொடுத்து, செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள் குறித்து விளக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் – 38வது வட்டம்
அடுத்த செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – 38வது வட்டம் | சீமான் எழுச்சியுரை