மழைநீரை அகற்றக்கோரி திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம்

42

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதி, திருநின்றவூர், பெரியார் நகரில் பதினைந்து நாட்களுக்கு மேலாக தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (26-12-15) மாலை 3 மணிக்கு  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மழைநீரை அகற்றக்கோரி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் வழங்கினார் சீமான்.

முந்தைய செய்திபீர்க்கன்கரணை வெள்ளப்பெருக்கு பகுதிகளில் துப்புரவுப் பணியில் சீமான்
அடுத்த செய்திஅண்ணா நகரில் இலவச மருத்துவ முகாம்