திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக 07-11-2015 அன்று மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர், காரம்பாக்கம் பகுதியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரவாயல் தொகுதி வேட்பாளர் வாசு, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் பொன்னரசு ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.