தமிழ் மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த இலங்கை அரசை கண்டித்தும், கச்சத்தீவை மீட்காமல் மீனவர்களை தொடர்ந்து இலங்கைக்கு பலிகொடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு 04/11/2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் செயராசு தலைமை வகித்தார். நகர செயலர் லோகு.திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.