தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி நடந்தது.

216

தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு சிவகங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக மானகிரியில் மாபெரும் கபாடி போட்டி 11-10-14 அன்று நடந்தது. இதில் புதுகை கிழக்கு மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், புதுகை கிழக்கு மண்டல செயலாளர் சத்தியமூர்த்தி, சிவகங்கை மாவட்ட செயலாளர் மாறன்  ஆகியோர் பங்கேற்றனர்.  மாநில இளைஞர் பாசறை செயலாளர்  பொறியாளர் துருவன் செல்வமணி கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.போட்டியில் மொத்தம் நாற்பது அணிகள் பங்குபெற்றன வெற்றிபெற்ற அணிகளுக்கு முத்துக்குமார் நினைவு கோப்பையும்,தமிழ்த்தேசியத்தலைவர் படம் பொறித்த பதக்கங்களும் வழங்கப்பட்டது

முந்தைய செய்திதிருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமைக்கருவேல மரங்களை அழிக்கிற பணி நடைபெற்றது.